கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கே.வி.கே.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியின்கீழ் ரூ.48.00 இலட்சம் மதிப்பீட்டில், கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (26.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் ரூ.67.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிப்பிடம் மற்றும் பேவர் அமைக்கும் பணியினை மாநகராட்சி

ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடித்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து வார்டு எண்.97க்குட்பட்ட கே.வி.கே.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியின்கீழ் ரூ.48.00 இலட்சம் மதிப்பீட்டில், கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டும் பணியினையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் குணசேகரன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், செயற்பொறியாளர் (பொ) கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர்கள் சுந்தர்ராஜ், சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...