உடுமலையைச் சேர்ந்த களரி பயட்டு வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி உயரிய ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பு

விக்னேஸ்வரன் சுவடுகள் பிரிவில் வெண்கல பதக்கமும், உரிமி வீசல் பிரிவில் விசாலி வெண்கல பதக்கமும், கெட்டுக்கரி பிரிவில் ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய, சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற 601 பேருக்கு 16.31

கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது.

இதில் களரிப் போட்டி முதல் முறையாகச் சேர்க்கப்பட்டது. தமிழக அணி சார்பாக 8 பேர் கலந்து கொண்டு, அதில் நான்கு பேர் வெண்கல பதக்கம் வென்றனர். விக்னேஸ்வரன் சுவடுகள் பிரிவில் வெண்கல பதக்கமும், உரிமி வீசல் பிரிவில் விசாலி வெண்கல பதக்கமும், கெட்டுக்கரி பிரிவில் ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இவர்களுக்கும் திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா களரிப் போட்டியில் வெற்றி பெற்ற சுர்ஜித்திற்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயரிய ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

இந்த ஊக்கத் தொகை விளையாட்டு வீரர்களின் மேற்படிப்பிற்கும், குடும்ப பொருளாதாரத்திற்கும் பெரும் உதவிகரமாக இருக்கும் என்றும், உயரிய ஊக்கத் தொகை வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு களரிப் பயட்டு செயலாளர் வீரமணி ஆசான் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...