உடுமலையில் புகழ்பெற்ற சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீ இராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட முத்தையா பிள்ளை லே-அவுட் பகுதியில் அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர்கோவில் உள்ளது. கோவிலில் சக்தி விநாயகர், தட்சணாமூர்த்தி, துர்க்கை அம்மன், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சண்முக சுப்பிரமணியர், காலபைரவர், நவகிரகங்கள் ஆகிய கடவுள்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.



கோவிலில் லட்சுமி நரசிம்மர், லிங்கோத்பவர் புதிதாக பிரதிஷ்டை செய்வது எனவும், புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு பணிகள் நிறைவு பெற்ற பின் கும்பாபிஷேக விழா இன்று ஸ்ரீ இராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள் தலைமையில் காலை 9 மணிக்கு மேல் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது.

பின்னர் கோபுர விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக வைபவமும், பின்னர் சக்தி விநாயகர், முருகப்பெருமான், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், கோதரிசனம், தீபாராதனை, ரக்ஷாபந்தன விசர்ஜனம் நடைபெற உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...