உடுமலையில் புகழ்பெற்ற சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீ இராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட முத்தையா பிள்ளை லே-அவுட் பகுதியில் அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர்கோவில் உள்ளது. கோவிலில் சக்தி விநாயகர், தட்சணாமூர்த்தி, துர்க்கை அம்மன், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சண்முக சுப்பிரமணியர், காலபைரவர், நவகிரகங்கள் ஆகிய கடவுள்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.



கோவிலில் லட்சுமி நரசிம்மர், லிங்கோத்பவர் புதிதாக பிரதிஷ்டை செய்வது எனவும், புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு பணிகள் நிறைவு பெற்ற பின் கும்பாபிஷேக விழா இன்று ஸ்ரீ இராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள் தலைமையில் காலை 9 மணிக்கு மேல் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது.

பின்னர் கோபுர விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக வைபவமும், பின்னர் சக்தி விநாயகர், முருகப்பெருமான், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், கோதரிசனம், தீபாராதனை, ரக்ஷாபந்தன விசர்ஜனம் நடைபெற உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...