கணேசபுரம் 64-வது வார்டுக்கு உட்பட்ட சடையப்பன் வீதியில் சாக்கடைகளை தூர்வார மாநகராட்சி ஆணையாளருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (பிப்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு தொகுதி கணேசபுரம் 64-வது வார்டுக்கு உட்பட்ட சடையப்பன் வீதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர்வாரி சீர் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இப்பதியில் உப்பு தண்ணீருக்காக தோன்றிய குழிகள் இன்னும் மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் தோன்றிய பள்ளங்களில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே இதனையும் கருத்தில் கொண்டு சரி செய்து தருமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...