உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களின் வீடியோ வைரல்

கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருட்டில் ஈடுபடுவதால், குடிமங்கலம் காவல்துறையினர் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஊராட்சியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஊராட்சியை சுற்றி ஏராளமான நூற்பாலைகளும், தொழிற்சாலைகளும் அதிக அளவு இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருட்டில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து குடிமங்கலம் காவல்துறையிடம் பொதுமக்கள் தரப்பில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என குடியிருப்பு பகுதியில் சுற்றிதிரியும் மர்மநபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அனுப்பியும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாமல் அலட்சியமாக உள்ளனர்.

இதனால் இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட குடிமங்கலம் காவல்துறையினர் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர். கடற்கரையில் மர்ம நபர் திருட முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...