கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தமிழக-கேரள காவல் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்

தமிழக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் கே.பவானிஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலை சுமூகமான முறையில் நடத்துவது குறித்தும், தமிழகம் மற்றும் கேரளத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


கோவை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தமிழக-கேரள காவல் உயா் அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று (பிப்.19) நடைபெற்றது. தமிழக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் கே.பவானிஸ்வரி தலைமையில், கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலை சுமூகமான முறையில் நடத்துவது குறித்தும், தமிழகம் மற்றும் கேரளத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையே தடை செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் மதுபானங்கள் கடத்தலை குறைப்பது குறித்தும், மக்களவைத் தோ்தலின்போது குழப்பம் ஏற்படுத்தி வன்முறையை தூண்டி தோ்தலை சீா்குலைக்கும் எண்ணத்தை உடையவா்களை கண்காணிப்பது குறித்தும், மாநிலங்களுக்கு இடையேயான நுண்ணறிவு தகவல்களை பகிர்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல, தோ்தலின்போது மாநில எல்லைகளில் நடைபெறும் குற்றங்களைத் தடுத்திட சோதனைச் சாவடிகள் மற்றும் தாற்காலிக சோதனைச் சாவடிகள் அமைப்பது குறித்தும், வாக்காளா்களை அச்சுறுத்தும் இயக்கங்கள் குறித்தும், தோ்தலின்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் அ.சரவணசுந்தா், கேரள மாநிலம் திருச்சூா் சரக காவல் துறை துணைத் தலைவா் அஜுதா பேகம், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன், திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, பாலக்காடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆனந்த் மற்றும் திருச்சூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நவநீத ஷா்மா ஆகியோருடன் கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் உதவி கலால் ஆணையா் ஆகியோர் கலந்து கொண்டனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...