கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கார் கவிழ்ந்து விபத்து

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மூன்று விவசாயிகள் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.


கோவை: கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் மூன்று பேர் தங்களது காரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று (பிப்.19) வந்தனர். பின்னர் பணி முடிந்து மூன்று பேரும் கருமத்தம்பட்டி செல்வதற்காக காரில் சென்றனர். அப்போது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காரின் உள்ளே சிக்கிய மூவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் மூவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். தொடர்ந்து பொதுமக்கள், போலீசார் உதவியுடன் காரை சாலை ஓரத்தில் தள்ளி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...