கோவை வடக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ குடிநீர்‌ பணிகள்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ ஆய்வு

குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் பணிகள்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ ஆகியோர்‌ இன்று (19.02.2024) நேரில்‌ ஆய்வு மேற்கொண்டனா்‌.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.12க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ ஆகியோர்‌, நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.



தொடர்ந்து, அப்பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைப்பது தொடர்பாகவும்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌. அதனைத்‌ தொடாந்து, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.12க்குட்பட்ட நஞ்சை கவுண்டன்‌ புதூர்‌ பகுதியில்‌ நடைபெற்றுவரும்‌ பில்லூர்‌ குடிநீர்‌ அபிவிருத்தி பணிகள்‌ தொடாபாகவும்‌, ரங்கா நகர்‌ பகுதியில்‌ 24மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ்‌ பிரதான குடிநீர் குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌ நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

மேலும்‌, வார்டு எண்‌.19க்குட்பட்ட விவேகானந்தர் தெரு, ராமகிருஷ்ணாபுரம்‌, ஸ்ரீவாரி குடியிருப்பு பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌‌, நகரில்‌ பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி, குப்பைகளை முறையாக தூய்மைப்பணியாளர்களிடம்‌ வழங்காதவாகளுக்கு அபராதம்‌ விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, வார்டு எண்‌.11க்குட்பட்ட சிவசக்தி நகர்‌, மாருதி நகர்‌ பகுதியில்‌ புதிதாக தார்‌ சாலை அமையவுள்ள இடத்தினையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆப்வு மேற்கொண்டார்கள்‌.

இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினர்கள்‌ ராமமூராத்தி, பழனிசாமி (௭) சிரவை சிவா, உதவி ஆணையர்‌ ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர்‌ எழில்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர்‌ பவுன்ராஜ்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலா்கள்‌ உட்பட பலர் உள்ளனர்‌.

Newsletter

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...