மத்திய அரசின் கடுமையான விவசாய சட்டங்களால் கடந்தாண்டு 11,120 விவசாயிகள் தற்கொலை- பொள்ளாச்சியில் திருச்சி சிவா பேச்சு

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வலைகள் நசுக்கப்படுகிறது. தமிழகம், மேற்குவங்கம், டெல்லி, போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படாமல் செய்வது தான் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பணியாக உள்ளது என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறினார்.


கோவை: பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் நேற்று இரவு நடந்த உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பரப்புரை கூட்டம் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசிய போது, இந்திய அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் ஒவ்வொன்றையும் யோசித்து எழுதினார்கள். ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் அந்த மாண்புகள் சிதைக்கப்படுகிறது.

மத்திய அரசின் கடுமையான விவசாய சட்டங்கள் காரணமாக கடந்தாண்டு மட்டும் 11ஆயிரத்து 120 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வலைகள் நசுக்கப்படுகிறது. தமிழகம், மேற்குவங்கம் டெல்லி, போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படாமல் செய்வது தான் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பணியாக உள்ளது. நல்லதொரு அரசு என்றால் பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகரமன்ற தலைவர் சியாமளா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...