மத்திய அரசின் கடுமையான விவசாய சட்டங்களால் கடந்தாண்டு 11,120 விவசாயிகள் தற்கொலை- பொள்ளாச்சியில் திருச்சி சிவா பேச்சு

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வலைகள் நசுக்கப்படுகிறது. தமிழகம், மேற்குவங்கம், டெல்லி, போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படாமல் செய்வது தான் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பணியாக உள்ளது என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறினார்.


கோவை: பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் நேற்று இரவு நடந்த உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பரப்புரை கூட்டம் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசிய போது, இந்திய அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் ஒவ்வொன்றையும் யோசித்து எழுதினார்கள். ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் அந்த மாண்புகள் சிதைக்கப்படுகிறது.

மத்திய அரசின் கடுமையான விவசாய சட்டங்கள் காரணமாக கடந்தாண்டு மட்டும் 11ஆயிரத்து 120 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வலைகள் நசுக்கப்படுகிறது. தமிழகம், மேற்குவங்கம் டெல்லி, போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படாமல் செய்வது தான் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பணியாக உள்ளது. நல்லதொரு அரசு என்றால் பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகரமன்ற தலைவர் சியாமளா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...