உடுமலையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், மடத்துக்குளம் பாப்பான்குளத்தை சேர்ந்த ஜெகதீசன், உடுமலை ருத்திரப்பா நகரை சேர்ந்த நடராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோத மது விற்பனை நடைபெற்று வருவதாக உடுமலை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.ஜீவானந்தம் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நான்கு டாஸ்மாக் கடை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், மடத்துக்குளம் பாப்பான்குளத்தை சேர்ந்த ஜெகதீசன், உடுமலை ருத்திரப்பா நகரை சேர்ந்த நடராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நால்வரும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 68 மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அத்துடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...