உடுமலையில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியை தொடங்கி வைத்தார் டிஎஸ்பி சுகுமாறன்

10 வயதிற்கு உட்பட்டோருக்கு சப்ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சைலாத் சிலம்பச் சங்கம் நடத்தும் 4-வது ஆண்டு திருப்பூர், கோவை மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி நடைபெற்றது. உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் தொடங்கிய இந்த நிகழ்வுக்கு லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி, அறக்கட்டளை நிறுவனர் கே. ஆர்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆசான் வீரமணி வரவேற்றார். போட்டியை உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தொடக்கி வைத்தார்.



போட்டிகள் 10 வயதிற்கு உட்பட்ட பிரிவு, சப்ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 650 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது எஸ்.எம்.நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பூர்,கோவை மாவட்ட சைலாத் சிலம்ப சங்கம் மற்றும் லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...