தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான சுழற்சாவி தொழிலாளர் பயிற்சி

பேராசிரியர்களால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப விரிவுரைகள், ஆய்வு மற்றும் கள ஆய்வு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக பயிற்சியில் பங்கேற்றவர்கள், கருத்து தெரிவித்தனர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் நிதியுதவி பெற்று செயல்படும் சாண எரிவாயு மற்றும் பயிற்சி மையத்தின் (BDTC) மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கான சுழற்சாவி தொழிலாளர் பயிற்சி 02.02.2024 முதல் 16.02.2024 வரை நடத்தப்பட்டது.

பயிற்சியில் பங்கேற்றவர்கள், பேராசிரியர்களால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப விரிவுரைகள், ஆய்வு மற்றும் கள ஆய்வு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் BDTC ஒருங்கிணைப்பாளர், முனைவர் தே.ரமேஷ் தம் வாழ்த்துரையில், ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மாசு இல்லாத சூழலை ஏற்படுத்துவதற்கும், சாண எரிவாயு தொழில்நுட்பம் உகந்ததாக இருக்குமென எடுத்துரைத்தார். முனைவர் பொ.விஜயகுமாரி, இணைப்பேராசிரியர் ஆகியோரின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Newsletter

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்த...