அதிமுகவுக்கு நிரந்தர எதிரி திமுக தான் - கோவையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது மாநில அரசின் கடமை. அதிமுக மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று மக்கள் திட்டங்களை செய்தது என முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜைகள் மற்றும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட குடிநீர் சுத்தகரிப்பு நிலையங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து குடிநீர் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது மாநில அரசின் கடமை, அதிமுக மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று மக்கள் திட்டங்களை செய்தது.

அதே நடைமுறையை திமுக பின்பற்ற வேண்டும். அதிமுகவை பொருத்தவரை திமுக என்ற கட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டது. தமிழகத்தில் அதிமுகவுக்கு திமுக நிரந்தர எதிரி தான் என்று தெரிவித்தார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...