தண்ணீர் வரத்து குறைவால் இன்று முதல் கவியருவி மூடல் - வனத்துறை அறிவிப்பு

அருவிகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணிகள் குளிக்க உகந்த சூழல் வரும் போது கவியருவி மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி ஆழியார் அணை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள குரங்கு அருவி என்ற கவியருவி சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக விளங்கி வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வறட்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் கவியருவியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் ஆழியார் கவியருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து உள்ளதால், வனத்துறை சார்பில் கவியருவியை மூட உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று (பிப்.15) முதல் ஆழியார் கவியருவி மூடப்பட்டது.

மீண்டும் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணிகள் குளிக்க உகந்த சூழல் வரும் போது கவியருவி மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து அறியாமல் வந்து சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி உடன் திரும்பிச் செல்கின்றனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...