பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடல் குழு நீக்க மாத்திரை பற்றி தாய்மார்களுக்கு விளக்கம்

குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் குடல் புழு அதிகமாக உடலில் இருந்தால் அது ரத்த சோகையை உண்டாக்குகிறது. அதனால் பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது என காணொளி மூலம் விளக்கப்பட்டது.


கோவை: தேசிய குடல் குழு நீக்க நாள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் கொண்டாடப்பட்டது.



குழந்தைகள் நலப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வராஜ் மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் அமுதா, செவிலியர் ராணி, கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



இதில், சிகிச்சைக்கு வந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன் நன்மைகள் விளக்கப்பட்டது. குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் குடல் புழு அதிகமாக உடலில் இருந்தால் அது ரத்த சோகை உண்டாக்குகிறது. அதனால் பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது.



அதிக ரத்த சோகை உள்ள பெண்கள் கடைசி கட்டத்தில் பிரசவத்துக்கு வரும்போது உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு கூட அபாயம் உள்ளது. ரத்தசோகை இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தைக்கு ரத்த சோகை உள்ளது. இதை தடுப்பதற்காக வளரும் இளம் பெண்களுக்கு வாரம் ஒருமுறை இரும்பு சத்து மாத்திரைகள் பள்ளிகளில் கொடுக்கப்படுகிறது.

இரண்டு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கலாம். இவை அனைத்தும் காணொளி மூலம் விளக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...