பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் ஆய்வு

பொள்ளாச்சி பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வலியுறுத்தினார்.


கோவை: கோவை எஸ்பி பத்ரி நாராயணன் பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (பிப்.13) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பழுதடைந்த காவல் உதவி மையத்தை நகராட்சியுடன் கலந்து ஆலோசித்து தகுந்த இடத்திற்கு மாற்றி புது பொலிவுடன் சீரமைக்க அறிவுறுத்தினார்.



மேலும், பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாரை அவர் வலியுறுத்தினார். இதேபோல கோவை எஸ்பி பத்ரி நாராயணன் ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சோதனை சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி குற்றங்கள் நடவாமல் தவிர்க்க வேண்டும் என போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். உடன் டிஎஸ்பி ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...