பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் ஆய்வு

பொள்ளாச்சி பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வலியுறுத்தினார்.


கோவை: கோவை எஸ்பி பத்ரி நாராயணன் பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (பிப்.13) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பழுதடைந்த காவல் உதவி மையத்தை நகராட்சியுடன் கலந்து ஆலோசித்து தகுந்த இடத்திற்கு மாற்றி புது பொலிவுடன் சீரமைக்க அறிவுறுத்தினார்.



மேலும், பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாரை அவர் வலியுறுத்தினார். இதேபோல கோவை எஸ்பி பத்ரி நாராயணன் ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சோதனை சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி குற்றங்கள் நடவாமல் தவிர்க்க வேண்டும் என போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். உடன் டிஎஸ்பி ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...