தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அஸ்ஸாம் மாநில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி முன்னிலையில் CO5 கம்பு நேப்பியர் வீரிய ஒட்டு புல் இரகத்தினை வணிக ரீதியான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதற்காக கையொப்பமானது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அஸ்ஸாம் தீவனப்பயிர் இயக்கத்தின் உதவியின் கீழ் அஸ்ஸாமில் உள்ள இரண்டு நிறுவனங்களான பிரான்பந்து தாஸ் நிறுவனம் மற்றும் இரஃபிக் அலி குழுமத்துடன், 09.02.2024 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி முன்னிலையில் CO5 கம்பு நேப்பியர் வீரிய ஒட்டு புல் இரகத்தினை வணிக ரீதியான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதற்காக கையொப்பமானது.

CO 5 கம்பு நேப்பியர் வீரிய ஒட்டு புல் இரகமானது, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் கீழ் இயங்கும் தீவனப்பயிர் துறை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, அகில இந்திய அளவில் 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.



இந்த வீரிய ஒட்டு இரகமானது கால்நடை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த வீரிய ஒட்டு இரகம் அதிக தீவன உற்பத்தித்திறன், அகலமான இலைகள், மிருதுவான தண்டுகள், அதிக புரதச்சத்து (14%), குளிரைத் தாங்கி வளர்தல், விரைவில் தழைத்து வளரக்கூடிய தன்மை மற்றும் ஆண்டு முழுவதும் சீரான தீவன மகசூல் தரக்கூடிய தன்மை கொண்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர், முனைவர் இரா.தமிழ்வேந்தன் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் பிரான்பந்து தாஸ் குழுமத்தின் சார்பாக பிரான்பந்து தாஸ், இரஃபிக் அலி நிறுவனத்தின் சார்பாக முகமது இரஃபிக் அலி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனர் முனைவர் இரா.ரவிகேசவன், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரக பேராசிரியர் முனைவர் எஸ்.சுந்தரேஸ்வரன், தீவனப்பயிர் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர்.புஷ்பம், தீவனப்பயிர் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனத்தின் அலுவலர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...