கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பட்டமளிப்பு விழா

தமிழகம் முழுவதும் 15 பயிற்சி மையங்களில் பயின்ற முதியவர்கள் உட்பட 706 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் கடந்த 2005 ல் துவங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மற்ற பட்டபடிப்பு முடித்த மாணவர்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர்.



இந்நிலையில் தமிழகம் முழுவதும் 15 பயிற்சி மையங்களில் பயின்ற முதியவர்கள் உட்பட 706 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட மாணவர்கள் தங்களது பட்டத்தை பெற்றனர். குறிப்பாக உரம் கடை வைத்திருப்போர் கட்டாயம் துறை சார்ந்த பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரக்கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஒரு ஆண்டு படிக்கும் டிப்ளமோ அக்ரி இன்புட்ஸ் போன்ற படிப்புகளை கற்று தேரி பட்டம் பெற்றனர்.



இதில் 19 பெண்கள் உட்பட 49 பேர் மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பிடித்தனர்.

இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற 59 வயது முதியவர் ஒருவர் அனைத்து செமஸ்டர்களையும் எழுதி தேர்ச்சி பெற்ற நிலையில், அவர் இன்று பட்டம் பெற்றார். பி.ஏ பட்டதாரியான முதியவர் வயதான காலத்தில் பட்டம் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், புதிய அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...