கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பட்டமளிப்பு விழா

தமிழகம் முழுவதும் 15 பயிற்சி மையங்களில் பயின்ற முதியவர்கள் உட்பட 706 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் கடந்த 2005 ல் துவங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மற்ற பட்டபடிப்பு முடித்த மாணவர்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர்.



இந்நிலையில் தமிழகம் முழுவதும் 15 பயிற்சி மையங்களில் பயின்ற முதியவர்கள் உட்பட 706 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட மாணவர்கள் தங்களது பட்டத்தை பெற்றனர். குறிப்பாக உரம் கடை வைத்திருப்போர் கட்டாயம் துறை சார்ந்த பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரக்கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஒரு ஆண்டு படிக்கும் டிப்ளமோ அக்ரி இன்புட்ஸ் போன்ற படிப்புகளை கற்று தேரி பட்டம் பெற்றனர்.



இதில் 19 பெண்கள் உட்பட 49 பேர் மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பிடித்தனர்.

இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற 59 வயது முதியவர் ஒருவர் அனைத்து செமஸ்டர்களையும் எழுதி தேர்ச்சி பெற்ற நிலையில், அவர் இன்று பட்டம் பெற்றார். பி.ஏ பட்டதாரியான முதியவர் வயதான காலத்தில் பட்டம் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், புதிய அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...