உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆட்சியர் ஆய்வு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்திருந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி நகர் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு கான்கிரீட் வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் இலங்கை தமிழர் முகாமில் கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று திடீரென திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் இலங்கைத் தமிழர் மறுவாழ் முகாமில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் கூறியாவது, தற்பொழுது முகாமில் கான்கீரிட் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வீடுகளில் டைல்ஸ் மற்றும் சமையலறையில் மேசை மற்றும் குடிநீர் இணைப்பு உள்ள அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

தெரு விளக்கு சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் ஆட்சித் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆட்சித் தலைவர் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சித் தலைவர் கூறினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வின் போது உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், உடுமலை ஒன்றிய வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடுமலை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...