உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் 31.5.2024 ஆம் தேதி வரை உரிய இடைவெளிவிட்டு பாசன நீர் வழங்கப்பட உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீரை பிரதான கால்வாயில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் வழியாக நான்கு மண்டலங்களாக பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் இன்று முதலாம் மண்டலத்திற்கான பாசன நீர் திருமூர்த்தி அணையில் இருந்து இன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இன்று முதல் 31.5.2024 ஆம் தேதி வரை உரிய இடைவெளிவிட்டு பாசன நீர் வழங்கப்பட உள்ளது.



திருமூர்த்தி அணையிலிருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் பிரதான கால்வாயில் திறந்துவிடப்பட்டது.

இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மடத்துக்குளம் திருப்பூர்-பல்லடம் தாராபுரம் மற்றும் காங்கேயம் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.



தண்ணீரை திருப்பூர் மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்தார்.

செயற்பொறியாளர் மகேந்திரன், காஞ்சித்துரை, உதவி பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெயக்குமார், முத்துசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



திருமூர்த்தி அணையில் தற்போது அணையின் நீர்மட்டம் மொத்தம் 60 அடி கொள்ளளவில் 55.15 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...