வேடப்பட்டியில் மதுபோதையில் தகராறு செய்த பூசாரி அடித்துக் கொலை - மனைவி மற்றும் மகன் கைது

வீட்டிற்கு வந்த பூசாரி தங்கவேல் மதுபோதையில் மகனை கட்டையால் அடிக்க முற்பட்டுள்ளார். அப்போது அவரிடம் இருந்து கட்டையை பிடுங்கிய மகன் தந்தையின் மண்டையில் பலமாக அடித்துள்ளார். மகனுடன் சேர்ந்து தாய் வஞ்சிக்கொடியும் மம்மட்டியால் தங்கவேலை தாக்கி உள்ளார். இதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் வேடப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (58). இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் தலைமை பூசாரியாக பணி செய்து வருகிறார். இவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவி மகனுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு, வீட்டுக்குச் சென்றவர், மனைவி மற்றும் மகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கும் அவரது மகன் வாசுதேவன்(29).

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மகனை கட்டையால் அடிக்க தங்கவேல் முற்பட்டுள்ளார்.

அப்போது அவரிடம் இருந்து கட்டையை பிடுங்கிய மகன் தந்தையின் மண்டையில் பலமாக அடித்துள்ளார். மேலும் மகனுடன் சேர்ந்து தாய் வஞ்சிக்கொடியும்

(49) அருகில் இருந்த மம்மட்டியால் தங்கவேலை தாக்கி உள்ளார்.இதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்துஅக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மடத்துக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் தங்கராஜ் உடலை மீட்டு,பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின் வஞ்சிக்கொடி மற்றும் வாசுதேவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் தங்கவேலைத் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து மேற்படி நபர்கள் இருவர் மீதும் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கணவனை மனைவி மற்றும் மகன் கொலை செய்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...