பிஜேபிக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓபிஎஸ் செய்கிறார் - சின்னியம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் பிஜேபி இல்லாத கூட்டணி தான் அமையும். பிஜேபி தவிர்த்து யாரு வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். அதிமுக யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை யாருக்காகவும் தட்ட வேண்டிய சூழலும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு முன்னதாக தொழில் அமைப்புகளுடன் கலந்து ஆலோசிக்கும் கூட்டமானது நடைபெற்றது.



நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபிக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓபிஎஸ் செய்து வருகிறார். திருடனுக்குப் பிறகு ஓபிஎஸ் பிஜேபியில் இணைந்து விடுவார். பிஜேபியுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். அதிமுகவைப் பொறுத்தவரையில் பெரிய கூட்டணி மகத்தான கூட்டணி அமையும்.

தமிழகத்தில் பிஜேபி இல்லாத கூட்டணி தான் அமையும். பிஜேபி தவிர்த்து யாரு வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். அதிமுக யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை யாருக்காகவும் தட்ட வேண்டிய சூழலும் இல்லை. அதிமுகவை நோக்கி தான் கட்சிகள் வரும்.

திமுக சார்பாக தேர்தல் அறிக்கைக்காக கனிமொழி தமிழகம் முழுவதும் பயணம் செய்கிறார். ஒரு நான்கு செவுத்துக்குள் இருந்து கொண்டு மனுக்களை பெற்று வருகிறார். அதிமுகவை போன்று ஆடிட்டோரியங்களில் மனுக்களை வாங்க தற்போது திமுகவும் செய்து வருகிறது. மக்கள் எங்களுடன் மனு கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்களைத் தடுத்து வருகின்றனர். 17 வருடங்களாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக இதுவரை என்ன தமிழகத்துக்கு செய்தது அதிமுக மாநில உரிமைக்காக பாடுபட்டது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது. திமுக எல்லை தாண்டி மீன்பிடித்தது தொடர்பாக குறைவான சம்பவங்களே அதிமுக ஆட்சியில் நடைபெற்றது.

அதிமுகவை கண்டால் இலங்கை அரசிற்கு பயம் அப்போது இருந்தது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியதற்கு மக்களை பாதிக்கின்ற எந்த சட்டமாக இருந்தாலும் அதிமுக எதிர்க்கும். சிறுபான்மையின மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும் அதை அதிமுக எதிர்க்கும். பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டுள்ள இந்தியாவை பதில் சிவில் சட்டத்தை அனுமதிக்க முடியாது.

அண்ணாமலை பொறுத்த மட்டில் பல கருத்துகளை கூறி மாட்டிக் கொண்டு வருகிறார். அவரின் கருத்துக்கள் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக பல் குறித்து கூற வேண்டாம் என நினைக்கிறேன். படாமல் என சொல்லியது எப்படி சென்று கொண்டிருக்கிறது. அதுபோல அதைக் கூறுபவர்களும் லேகியம் இருப்பவரை போலத்தான் இருப்பார்கள். அதிமுகவைப் பொறுத்த மட்டில் திமுகவின் பகையாளி பாஜகவும் பகையாளி அதிமுகவை எதிர்க்கும் போது என தெரிவித்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...