கோவை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

கோவை ரயில் நிலையம் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஒரு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் ஒரு பார்சல் கிடந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: வட மாநிலத்தில் இருந்து கோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கோவை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு (ஆர். பி. ஏப்) தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று (பிப்.9) கோவை ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஒரு ரயிலில் சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் ஒரு பார்சல் கிடந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்தான் அந்த கஞ்சாவை கடத்தி வந்ததவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மருதமலையை சேர்ந்த கோவிந்தன் (வயது55) என்பது தெரியவந்தது. அவர் எந்த பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...