கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த மேயர் கல்பனா ஆனந்தகுமார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் மற்றும் நாகராஜபுரம் பகுதியில் உள்ள மண் சாலையை ரூ.24.60 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், ரூ.18.10 இலட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், ரூ.16.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்கம்பங்களுடன் கூடிய தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் கோண்டி நகர் பகுதியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொதுகழிப்பிடம் கட்டும் பணி, ரூ.8.68 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (பிப்.9) பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சபரிராஜ் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...