ஓய்வு பெற்ற காவலர்கள் பயிற்சி முகாம் மூலம் உயர் அதிகாரிகளாக தேர்வு பெற்ற காவலர்களுக்கு கோவை காவல் ஆணையர் வாழ்த்து

பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர்களாகவும், அதேபோல காவல் நிலைய தீயணைப்பு துறை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களை நேரில் வரவழைத்து கோவை மாநக காவல் ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை அவிநாசி சாலை மற்றும் பாலசுந்தரம் சாலை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மூலம் அரசுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

அதில் கோவை ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றும் பல்வேறு காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர்களாகவும், அதேபோல காவல் நிலைய தீயணைப்பு துறை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.7) நேரில் வரவைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். பின்னர் இவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...