பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் சார்பாக கொங்கு நாட்டு சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா

விழாவில் ஈரோடு யு.ஆர்.சி கட்டுமான நிறுவன இயக்குனர் தேவராஜனுக்கு, கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுசீந்திரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக ரத்தினம் விருது வழங்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்கள் சார்பில் அமரர் நாச்சிமுத்து கவுண்டர் 75வது ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நிறுவனர் தினத்தையொட்டி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கும் விழா மகாலிங்கம் பொறியியல் கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஈரோடு யு.ஆர்.சி கட்டுமான நிறுவன இயக்குனர் தேவராஜனுக்கு, கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுசீந்திரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக ரத்தினம் விருது வழங்கப்பட்டது.



என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன் மற்றும் செயலாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



விழாவில் பேசிய யு.என்.சி. கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜன், மாணவர்கள் தங்கள் இலக்கினை நோக்கி விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு இலக்கையும் தனி கவனம் செலுத்தி இலக்கை அடையும்வரை விடாமுயற்சி செய்து வெற்றியடைய வேண்டும் என கூறினார்.



இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ கல்வி நிறுவனங்களின் மாணவ. மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...