பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் விநியோகம் வரும் 11-ல் தொடக்கம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற 11ஆம் தேதி பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று (பிப்.6) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை மாநகரில் 2035ஆம் ஆண்டுக்கான மக்கள் தேவையை கருத்தில் கொண்டு தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோகத்திற்கான ரூபாய்.779 கோடி மதிப்பில் பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டம் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பவானியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பில்லூர் 3வது திட்டத்துக்காக முருகையன் பரிசல் துறை பகுதியில் ரூபாய் 134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலையம் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூருக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள் புரத்தில் ரூபாய் 104. 90 கோடி மதிப்பில் 178 எம் எல் டி திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இங்கிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் கட்டன் மலைக்கு தண்ணீர் செல்கிறது. அங்கு 900 மீட்டர் தூரத்துக்கு சுங்கம் அமைக்கப்பட்டு பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற 11ஆம் தேதி பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...