உப்பாறு அணை அலுவலகம் வளாகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - போலீசார் குவிப்பு

உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கடந்த 16-நாட்களாக உப்பாறு அணை விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீர் திறக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என தெரிவித்து உப்பாறு பாசன விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் வருகின்ற 6-ம் தேதி செவ்வாய்க்கிழமைக்குள் தண்ணீர் திறக்கவில்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்து இருந்த நிலையில்.



இன்று 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...