பன்னிமடை ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் - வெற்றி கண்ட 10 ஊராட்சிக் கவுன்சிலர்கள்

ஊராட்சி செயலர் செழியன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அரசு திட்டங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், இதனால் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை எனக்கூறி 8 கவுன்சிலர்கள் பன்னிமடை ஊராட்சி அலுவலகத்தின் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை துடியலூரை அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் தங்கள் வார்டுகளுக்கு சரிவர பணிகளை ஒதுக்காத ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட 10 ஊராட்சிக் கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூர், தாளியூர், கணுவாய், கே.என்.ஜி.புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைவராகவும் மற்றும் துணைத்தலைவர் அருள்குமார் உட்பட 15 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். ஊராட்சி செயலாராக செழியன் என்பவர் உள்ளார்.



இந்த நிலையில் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலர் செழியன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அரசு திட்டங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், இதனால் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை, தங்கள் வார்டுகளுக்கு பணிகள் எதையும் ஒதுக்குவது இல்லை என்றும், அரசால் அறிவிக்கப்பட்டும் நலத்திட்டங்கள் மற்றும் முகாம்கள் குறித்து எந்த வித தகவல்களும் தெரிவிப்பதில்லை என்றும் கூறி ஊராட்சித் துணைத் தலைவர் அருள்குமார் தலைமையில் 8 கவுன்சிலர்கள் இன்று பன்னிமடை ஊராட்சி அலுவலகத்தின் உள்அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் அருள்குமார், சாந்தி சிவராஜன், ராமசந்திரன், கவிதா சிவகுமார், பி.டி.கோபாலசாமி, மாரித்தாய் சுந்தரராஜ், விஜயலட்சுமி பழனிசாமி, ஜெயமணி செல்வராஜ், முருகேசன், வாசுமணி உள்ளிட்ட 10 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டம் நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜென்கின்ஸ் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சிக் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் ஊராட்சி செயலரை மாற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கவுன்சிலர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உயர் அதிகாரிகளிடம் பேசினார். உடனடியாக ஊராட்சி செயலரை மாற்றுவதாக கவுன்சிலர்களிடம் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 10 ஊராட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து துணைத்தலைவர் கூறும்போது, ஊராட்சி செயலரை மாற்றுவதாக கூறியுள்ளனர். மாற்றவில்லை என்றால் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இதனால் ஊராட்சி அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...