பன்னிமடை ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் - வெற்றி கண்ட 10 ஊராட்சிக் கவுன்சிலர்கள்

ஊராட்சி செயலர் செழியன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அரசு திட்டங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், இதனால் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை எனக்கூறி 8 கவுன்சிலர்கள் பன்னிமடை ஊராட்சி அலுவலகத்தின் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை துடியலூரை அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் தங்கள் வார்டுகளுக்கு சரிவர பணிகளை ஒதுக்காத ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட 10 ஊராட்சிக் கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூர், தாளியூர், கணுவாய், கே.என்.ஜி.புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைவராகவும் மற்றும் துணைத்தலைவர் அருள்குமார் உட்பட 15 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். ஊராட்சி செயலாராக செழியன் என்பவர் உள்ளார்.



இந்த நிலையில் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலர் செழியன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அரசு திட்டங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், இதனால் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை, தங்கள் வார்டுகளுக்கு பணிகள் எதையும் ஒதுக்குவது இல்லை என்றும், அரசால் அறிவிக்கப்பட்டும் நலத்திட்டங்கள் மற்றும் முகாம்கள் குறித்து எந்த வித தகவல்களும் தெரிவிப்பதில்லை என்றும் கூறி ஊராட்சித் துணைத் தலைவர் அருள்குமார் தலைமையில் 8 கவுன்சிலர்கள் இன்று பன்னிமடை ஊராட்சி அலுவலகத்தின் உள்அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் அருள்குமார், சாந்தி சிவராஜன், ராமசந்திரன், கவிதா சிவகுமார், பி.டி.கோபாலசாமி, மாரித்தாய் சுந்தரராஜ், விஜயலட்சுமி பழனிசாமி, ஜெயமணி செல்வராஜ், முருகேசன், வாசுமணி உள்ளிட்ட 10 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டம் நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜென்கின்ஸ் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சிக் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் ஊராட்சி செயலரை மாற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கவுன்சிலர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உயர் அதிகாரிகளிடம் பேசினார். உடனடியாக ஊராட்சி செயலரை மாற்றுவதாக கவுன்சிலர்களிடம் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 10 ஊராட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து துணைத்தலைவர் கூறும்போது, ஊராட்சி செயலரை மாற்றுவதாக கூறியுள்ளனர். மாற்றவில்லை என்றால் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இதனால் ஊராட்சி அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...