சாலையோர வியாபாரிகள் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் வழியாக முதலமைச்சருக்கு விண்ணப்பம்

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டத்தை மாவட்டம் முழுவதும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக முதலமைச்சருக்கு விண்ணப்பம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில்,குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1. 2015ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டம் அரசிதழில் வெளியிட்டு 02.11.2015 முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களால் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மாவட்டம் முழுவதும் இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

2. மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வியாபாரச் சான்று மற்றும் ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டை காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வழங்க வேண்டும்.

3. அடையாள அட்டை முழுமையாக வழங்கப்பட்டு வணிகக் தேர்தல் நடத்திட வேண்டுவதுடன் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதை உறுதிப்படுத்தி வணிகக் குழுவை முறையாக செயல்படுத்த வேண்டுகிறோம்.

4. வணிகக்குழுவிற்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்திடவும். பணியாளர்கள் ஒதுக்கீடு செய்து அலுவலகம் முறையாக செயல்பட வேண்டுகிறோம்.

5. தெரு வியாபாரிகளிடம் வணிக கட்டணம் வசூலிக்க டெண்டர் விடுவதை கைவிட வேண்டுவதுடன், திட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வணிக கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டுகிறோம்.

6. வணிகக்குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.

7. தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வங்கி மூலம் கடன் வழங்கவும் தொழிற்சங்க ஒத்துழைப்புடன் முறையாக திரும்ப செலுத்துவதற்கான பெரும் திட்டம் கொண்டு வந்து அனைத்து தெருவோர வியாபாரிகளுக்கும் பயனடையும் விதத்தில் செயல்படுத்த வேண்டுகிறோம்.

8. தெரு வியாபார பொருட்களை இரவில் பாதுகாப்புடன் வைப்பதற்கான இட வசதி செய்து தர வேண்டுகிறோம்.

9. உள்ளாட்சிப் பகுதிகள் அனைத்திலும் இந்தத் திட்டம் அமல்படுத்த வேண்டும். ஆனால், கிராம ஊராட்சி, பெரும்பாலான பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே. அனைத்து கிராம ஊராட்சி, பேரூராட்சிகளில் இதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...