கைகாட்டி என்ற இடத்தில் குடியிருப்புக்கு மத்தியில் எழுப்பப்பட்ட சுவர் – இருதரப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கால்நடைகளிடம் இருந்து பாதுகாப்புக்காக மட்டுமே குடியிருப்புக்கு நடுவில் அமைக்கப்பட்ட சுவர் அமைப்பட்டதாக விஐபி நகர் மக்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் இது தீண்டாமை சுவர் என்று தேவேந்திரன் நகர் மக்கள் புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே கைகாட்டி என்னும் இடத்தில் விஐபி நகர் மற்றும் தேவேந்திரன் நகர் ஆகிய இரண்டு குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இதில் வெவ்வேறு சமூகத்தினர் வசித்து வரக்கூடிய நிலையில் விஐபி நகர் பகுதியில் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில்,

விவசாய நிலத்திற்கு கால்நடைகளிடம் இருந்து பாதுகாப்பு கருதி 380 மீட்டர் தூரத்திற்கு தனக்கு பாத்தியப்பட்ட இடத்தில் சுவர் எழுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் அதனை மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தீண்டாமை சுவர் என பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக தங்கள் பகுதியைச் சார்ந்தவர்களின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்கள் பகுதியில் குடியிருந்து வருகின்ற நிலையில் தங்கள் குடியிருப்போர் நலச் சங்கத்திலும் அவர்கள் பொறுப்புகளில் பதவி வைத்து வருகின்றனர். ஆனால் சிலர் சுயநலத்திற்காக அதனை தீண்டாமை சுவர் என பரப்பி வருகின்றனர். அரசு அதிகாரிகளும் தீண்டாமை சுவரையற்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் இறுதி முடிவுக்கு கட்டுப்பட இருக்கிறோம். அதுவரை தாங்கள் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு சுவரை தீண்டாமை சுவர் என பெயரிடக் கூடாது எனவும் , அவ்வாறு அழைக்கும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் , விஐபி நகர் பகுதியைச் சேர்ந்த நிலத்தின் உரிமையாளர் உட்பட பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதேபோல், தேவேந்திரன் நகர் பகுதியில் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் விஐபி நகர் பகுதி வழியே செல்லக்கூடாது என்பதற்காக சுவர் எழுப்பப்பட்டு இருப்பதாக புகார் மனு அளித்தனர். ஏற்கனவே இதை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், தொடர்ந்து சுவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் தங்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர். இதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேவேந்திரன் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...