கோவையில் 15 பவுன் வழிப்பறி செய்ததாக காவல்துறையிடம் நாடகமாடிய அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர்

சரவணம்பட்டி காவல்துறையினர் சந்திரகலாவை இன்று (பிப்.5) அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரிடம் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகை திருடு போகவில்லை என்றும், தான் பொய்யான தகவலை காவல்துறையிடம் அளித்ததாகவும் சந்திரகலா ஒப்புக்கொண்டார்.


கோவை: கோவை கணபதி நேரு நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சந்திரகலா (52), இவர் அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சத்தி சாலையில் இருந்து தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இவர்களது வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் சந்திரகலா கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு சென்றதாகவும், அப்போது சந்திரகலாவும் அவரது கணவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாகவும், இதனால் சந்திரகலாவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த மாதம் கணபதி பகுதியில் சந்திரகலாவிடம் வழிப்பறியில் முயற்சி செய்ததாகவும், ஆனால் 15 சவரன் நகையை நான் வழிப்பறி செய்யவில்லை என்றும் அந்த நபர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் சந்திரகலாவை இன்று (பிப்.5) அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரிடம் வைத்து விசாரணை மேற்கொண்ட போது நகை திருடு போகவில்லை என்றும், தான் பொய்யான தகவலை காவல்துறையிடம் அளித்ததாகவும் சந்திரகலா ஒப்புக்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...