கோவையில் 15 பவுன் வழிப்பறி செய்ததாக காவல்துறையிடம் நாடகமாடிய அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர்

சரவணம்பட்டி காவல்துறையினர் சந்திரகலாவை இன்று (பிப்.5) அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரிடம் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகை திருடு போகவில்லை என்றும், தான் பொய்யான தகவலை காவல்துறையிடம் அளித்ததாகவும் சந்திரகலா ஒப்புக்கொண்டார்.


கோவை: கோவை கணபதி நேரு நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சந்திரகலா (52), இவர் அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சத்தி சாலையில் இருந்து தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இவர்களது வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் சந்திரகலா கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு சென்றதாகவும், அப்போது சந்திரகலாவும் அவரது கணவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாகவும், இதனால் சந்திரகலாவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த மாதம் கணபதி பகுதியில் சந்திரகலாவிடம் வழிப்பறியில் முயற்சி செய்ததாகவும், ஆனால் 15 சவரன் நகையை நான் வழிப்பறி செய்யவில்லை என்றும் அந்த நபர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் சந்திரகலாவை இன்று (பிப்.5) அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரிடம் வைத்து விசாரணை மேற்கொண்ட போது நகை திருடு போகவில்லை என்றும், தான் பொய்யான தகவலை காவல்துறையிடம் அளித்ததாகவும் சந்திரகலா ஒப்புக்கொண்டார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...