கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றிபெற பாடுபட வேண்டும், அதற்காக கட்சியினர் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


கோவை: கோவை மண்டல மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள மணி மஹாலில் நேற்று (பிப்.4) நடைபெற்றது. மாநில செயலாளர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர்கள் மௌரியா, தங்கவேலு, மயில்சாமி, அனுஷா ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும், அதற்காக கட்சியினர் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் அறிவிக்கும் வேட்பாளருக்கு கட்சியினர் முழு ஆதரவை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மெளரியா செய்தியாளர்களை சந்தித்து பேசியாதவது, கோவை மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ள தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் தேர்தல் வழிமுறைகள் குறித்தும், தேர்தல் பணி குறித்தும், அதற்கான வழிமுறைகள் வகுக்கவும் கட்சியினருக்கு இந்த கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தி உள்ளோம்.

இந்த கூட்டத்தில் நாங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பாக கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து பாராளுமன்ற தொகுதியிலும் எவ்வாறு கட்சி பணி செய்ய வேண்டும், தேர்தல் பணியாற்ற வேண்டும், எவ்வாறு ஒன்றிணைந்து இந்த பணியை செய்ய வேண்டும் என நுணுக்கமாக அறிவுரைகளை வழங்கியுள்ளோம்.

நிர்வாகிகள் மிகச் சிறப்பாக பணியாற்றி வெற்றிக்காக உழைப்பார்கள். மேலும் எங்களுடைய மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பூத் கமிட்டிகளை அமைப்பதற்காக பாடுபடுவார்கள். இன்னும் ஒரு சில இடங்களில் பூத் கமிட்டி அமைக்க தேர்தல் பணிக்கான வியூகத்தை வகுத்து கூறியுள்ளோம் அதன்படி செயல்பட்டு அவர்கள் வெற்றியை பரிசளிப்பார்கள்.

யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என எந்த முடிவும் நாங்கள் செய்யவில்லை. தலைவர் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்வார். மேலும் கூட்டணியை பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தலைவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார். எத்தனை தொகுதி என்பதை அவர்தான் முடிவு செய்வார். கூட்டணி உள்ளதா இல்லையா என்பதை தலைவர் கமலஹாசன் தான் அறிவிப்பார் என தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...