பட்டியலின மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து உடுமலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தற்பொழுது சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக, பள்ளி கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்ற வருகின்றது என முன்னாள் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பட்டியல் இன மாணவி மீது கொடூர தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, தமிழகத்தில் தற்பொழுது சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக, பள்ளி கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்ற வருகின்றது.

தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பட்டியலின மாணவி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தற்பொழுது திமுக அரசால் புறக்கணிப்பு செய்யப்பட்டு உள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பேசினார்.



கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருப்பூர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...