பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னையில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபரை கைது செய்திருப்பது வெறும் நாடகம் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.


கோவை: சென்னையில் பட்டியலின மனைவியை வன்கொடுமை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடாவும், கோவை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை, வால்பாறை பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னையில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபரை கைது செய்திருப்பது வெறும் நாடகம் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு திமுக அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. கடுமையான மின் கட்டணம் உயர்வால் தொழில் நிறுவனங்களும், விசைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு திட்டமிட்டு செயல்படுத்தாமல் இருக்கிறது. நடைபெற இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். இதே போல் தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...