பொள்ளாச்சியில் மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவோம் என்றும், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க பாடுபவோம் என்றும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பொள்ளாச்சி தாலுகா வங்கி ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மாநில தலைவர் ரமேஷ் ஐயா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் புரிபவர்களின் உரிமையை மீட்டெடுக்கவும் அரசிடமிருந்து சலுகைகள் பெற்றுத் தரவும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும், தமிழகத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பை நடத்தி உள் இட ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும், மருத்துவ சமூக மக்களைப் பிற சமூக மக்கள் வன்கொடுமை தாக்குதல், கொலை செய்தல் மற்றும் பெண்களை இழிவு படுத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், திரைப்படங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...