6 வது கேலோ இந்தியா வாலிபால் விளையாட்டு போட்டி- கோவை கற்பகம் பல்கலை. வீரர் தங்க பதக்கம் வென்று அசத்தல்

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா வாலிபால் விளையாட்டு போட்டியில்,கோவை கற்பகம் பல்கலை மாணவர் ஏ.அதுல் நாயக், தமிழ்நாடு வாலிபால் அணிக்கு தேர்வாகி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றார்.


கோவை: 6வது கேலோ இந்தியா இளைஞர் தேசிய விளையாட்டு போட்டி இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய இளைஞர் விளையாட்டு துறை சார்பாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள வாலிபால் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜனவரி 19 முதல் 31 வரை நடைப்பெற்று வந்தது. இதில் கோவை கற்பகம் பல்கலை மாணவர் ஏ.அதுல் நாயக் பிபிஏ முதலாம் ஆண்டு தமிழ்நாடு வாலிபால் அணிக்கு தேர்வாகி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றார்.

அரையிறுதி போட்டியில் ஆந்திர அணியை போராடி வென்றது. இறுதி போட்டியில் பலம் வாய்த ஹரியானா அணியை 3-1 செட் கணகில் வென்று முதல் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவருக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி பதிவாளர் முனைவர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் மற்றும் பயிற்சியாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பாராட்டினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...