6 வது கேலோ இந்தியா வாலிபால் விளையாட்டு போட்டி- கோவை கற்பகம் பல்கலை. வீரர் தங்க பதக்கம் வென்று அசத்தல்

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா வாலிபால் விளையாட்டு போட்டியில்,கோவை கற்பகம் பல்கலை மாணவர் ஏ.அதுல் நாயக், தமிழ்நாடு வாலிபால் அணிக்கு தேர்வாகி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றார்.


கோவை: 6வது கேலோ இந்தியா இளைஞர் தேசிய விளையாட்டு போட்டி இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய இளைஞர் விளையாட்டு துறை சார்பாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள வாலிபால் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜனவரி 19 முதல் 31 வரை நடைப்பெற்று வந்தது. இதில் கோவை கற்பகம் பல்கலை மாணவர் ஏ.அதுல் நாயக் பிபிஏ முதலாம் ஆண்டு தமிழ்நாடு வாலிபால் அணிக்கு தேர்வாகி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றார்.

அரையிறுதி போட்டியில் ஆந்திர அணியை போராடி வென்றது. இறுதி போட்டியில் பலம் வாய்த ஹரியானா அணியை 3-1 செட் கணகில் வென்று முதல் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவருக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி பதிவாளர் முனைவர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் மற்றும் பயிற்சியாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பாராட்டினார்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...