மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை – கோவை ஆட்சியர் உறுதி

கரப்பாடி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வீட்டுமனை பட்டா, நத்தம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 597 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவையில் கடந்த மாதம் மக்களுடன் முதல்வர் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடி பிரிவு பகுதியில் தனியார் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வீட்டுமனை பட்டா, நத்தம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 597 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இதில் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த பேட்டியின் போது, கடந்த மாதம் முதல்வரின் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 19, ஆயிரம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இதில் 50 சதவீத மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு மனுக்கள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்திற்குள் அனைத்து மனுக்கள் மீதும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த மாவட்ட ஆட்சித் தலைவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்ற பொதுவான மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...