மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நகர திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் கோவை சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நகர திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளை திமுகவினர் மத நல்லிணக்க நாளாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.



இதனையடுத்து, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் கோவை சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பின்னர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...