கோழிகமுத்தி வளர்ப்பு யானை முகாம் பகுதியில் தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு

வால்பாறை பகுதியில் தாயை விட்டு பிரிந்த நான்கு மாத யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்த்த வனசரகர் மணிகண்டன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பாராட்டு சான்றிதழும், ரொக்க பரிசாக 5000 ரூபாயும் வழங்கினார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோழிகமுத்தி வளர்ப்பு யானை முகாம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு மேற்கொண்டார்.



தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பிரியா சாகு பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானை முகாமுக்கு வருகை தந்து அங்குள்ள வளர்ப்பு யானைகள் பராமரிப்பது குறித்து கேட்டிருந்த சுப்ரியா சாகு, அப்பகுதியில் குடியிருந்து வரும் மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டுறிந்ததோடு, பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் இடங்களை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டார்.



இதைத்தொடர்ந்து அக்காமலைக்கு சென்ற கூடுதல் தலைமைச் செயலாளர், வரையாடுகள் வாழ்விடம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



மேலும் வால்பாறை பகுதியில் தாயை விட்டு பிரிந்த நான்கு மாத யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்த்த வனசரகர் மணிகண்டன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும் ரொக்க பரிசாக 5000 ரூபாயும் வழங்கினார்.

மேலும் மந்திரிமட்டம் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் புலியை நேரில் பார்த்து அதன் பராமரிப்பு குறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டிருந்தார். இந்த ஆய்வின்போது கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்க்கவே தேஜா உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...