வடக்கு சர்க்கார் சாமகுளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் - ஆட்சியரிடம் இளைஞர் மனு

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளுக்கு மட்டுமே குடிவந்துள்ளதாகவும், இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கவில்லை என்றும், டேங் பைப் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் மாற்றுத்திறனாளி இளைஞர் புகார் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் கீரணத்தம் வடக்கு சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் இருப்பதாகவும், இது குறித்த பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அந்த குடியிருப்பில் வசிக்கும் விக்னேஷ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.29) மனு அளித்தார்.



பின் இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், அக்குமாடிகுடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளுக்கு மட்டுமே குடிவந்துள்ளதாகவும், இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கவில்லை என்றும், டேங் பைப் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தண்ணீர் குழாய்கள் போடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடவில்லை என்றும், உபரி நீர் மோட்டார் மற்றும் இரண்டு சார்ட்டுகள் பழுதடைந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அதனை சரி செய்யவில்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி,...