வடக்கு சர்க்கார் சாமகுளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் - ஆட்சியரிடம் இளைஞர் மனு

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளுக்கு மட்டுமே குடிவந்துள்ளதாகவும், இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கவில்லை என்றும், டேங் பைப் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் மாற்றுத்திறனாளி இளைஞர் புகார் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் கீரணத்தம் வடக்கு சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் இருப்பதாகவும், இது குறித்த பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அந்த குடியிருப்பில் வசிக்கும் விக்னேஷ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.29) மனு அளித்தார்.



பின் இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், அக்குமாடிகுடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளுக்கு மட்டுமே குடிவந்துள்ளதாகவும், இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கவில்லை என்றும், டேங் பைப் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தண்ணீர் குழாய்கள் போடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடவில்லை என்றும், உபரி நீர் மோட்டார் மற்றும் இரண்டு சார்ட்டுகள் பழுதடைந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அதனை சரி செய்யவில்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...