சரவணம்பட்டியில் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற தொழில்நுட்ப திறன் வளர்ப்பு போட்டியில் பள்ளி மாணவர்கள் அச்சத்தல்

பைதான் திட்டப் போட்டியில், முதல் பரிசினை கே.ஜி.எஸ் மற்றும் அவிலா கான்வென்ட் பள்ளியும், இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள கே.ஜி.மகளிர் பள்ளியும், நான்காவது இடத்தை ஆதித்யா வித்யாசரம் பள்ளியும், ஐந்தாம் இடத்தை ஏ.ஆர்.எம் பள்ளியும் பெற்று அசத்தின.


கோவை: லெட்ஸ் கோட் தமிழ்நாடு 2024 மூலம் தொழில்நுட்ப திறன் வளர்ப்பது தொடர்பான மூன்று மாத பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கபட்டது. இப்பயிற்சியின் இறுதியில் கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களால் பைதான் திட்டப் போட்டிகள் நடத்தபட்டது.

இதில் 30 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு மாணவர்களை நடைமுறை பைதான் திறன்களுடன் சிந்தனையை தூண்டுவதும், புதுமையான திட்டங்களைக் காண்பிப்பதற்கான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களின் வழிகாட்டிதலில் பைதான் பயிற்சியை பெற்ற மாணவர்கள் சிஸ்கோ பைதான் சான்றிதழைப் பெற்றனர். இந்த பைதான் திறன் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை கே.ஜி.மருத்துவமணையின் தலைவர் பக்தவச்சலம், கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி குழுமங்களின் தலைவர் அசோக் பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர் பரிசுகளை வழங்கினர்.



இதில் முதல் பரிசினை கே.ஜி.எஸ் மற்றும் அவிலா கான்வென்ட் பள்ளியும், இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள கே.ஜி.மகளிர் பள்ளியும், நான்காவது இடத்தை ஆதித்யா வித்யாசரம் பள்ளியும், ஐந்தாம் இடத்தை ஏ.ஆர்.எம் பள்ளியும் பெற்று அசத்தின. மேலும் இந்த பைதான் போட்டிக்கு மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்த பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...