சரவணம்பட்டியில் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற தொழில்நுட்ப திறன் வளர்ப்பு போட்டியில் பள்ளி மாணவர்கள் அச்சத்தல்

பைதான் திட்டப் போட்டியில், முதல் பரிசினை கே.ஜி.எஸ் மற்றும் அவிலா கான்வென்ட் பள்ளியும், இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள கே.ஜி.மகளிர் பள்ளியும், நான்காவது இடத்தை ஆதித்யா வித்யாசரம் பள்ளியும், ஐந்தாம் இடத்தை ஏ.ஆர்.எம் பள்ளியும் பெற்று அசத்தின.


கோவை: லெட்ஸ் கோட் தமிழ்நாடு 2024 மூலம் தொழில்நுட்ப திறன் வளர்ப்பது தொடர்பான மூன்று மாத பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கபட்டது. இப்பயிற்சியின் இறுதியில் கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களால் பைதான் திட்டப் போட்டிகள் நடத்தபட்டது.

இதில் 30 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு மாணவர்களை நடைமுறை பைதான் திறன்களுடன் சிந்தனையை தூண்டுவதும், புதுமையான திட்டங்களைக் காண்பிப்பதற்கான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களின் வழிகாட்டிதலில் பைதான் பயிற்சியை பெற்ற மாணவர்கள் சிஸ்கோ பைதான் சான்றிதழைப் பெற்றனர். இந்த பைதான் திறன் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை கே.ஜி.மருத்துவமணையின் தலைவர் பக்தவச்சலம், கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி குழுமங்களின் தலைவர் அசோக் பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர் பரிசுகளை வழங்கினர்.



இதில் முதல் பரிசினை கே.ஜி.எஸ் மற்றும் அவிலா கான்வென்ட் பள்ளியும், இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள கே.ஜி.மகளிர் பள்ளியும், நான்காவது இடத்தை ஆதித்யா வித்யாசரம் பள்ளியும், ஐந்தாம் இடத்தை ஏ.ஆர்.எம் பள்ளியும் பெற்று அசத்தின. மேலும் இந்த பைதான் போட்டிக்கு மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்த பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...