பொள்ளாச்சியில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மாணவர்களுக்காக ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் நடைபெற்றது

மாணவ மாணவிகளின் பொதுத்தேர்வு வெற்றிக்காக பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்று, பல்வேறு மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: ஜனவரி 29 அன்று, பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.



இந்த ஹோமம், தமிழ்நாடு மாநில பொதுத் தேர்வில் பங்கேற்கும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வெற்றி பெற ஆசிகளை பெறுவதற்கு நடத்தப்பட்டது.



இந்த நிகழ்வு, மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும், தேர்வு எழுதும் போது அச்சமின்றி இருக்க வேண்டும் மற்றும் கல்வி ஞானத்தில் சிறப்பு பெற வேண்டும் என்பதை முன்னிறுத்தி நடைபெற்றது.



கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த ஹோமத்தில் பங்கேற்றனர்.



ஹோமத்தில் வேத மந்திரங்கள் முழங்க லஷ்மி ஹயக்ரீவருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. மாணவர்கள் லஷ்மி ஹயக்ரீவர் மகா மந்திரத்தை 21 முறை உச்சரித்து, தேர்வுகளில் சிறந்து விளங்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில் பல பெற்றோர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு பென்சில், பேனா ஆகியவை வழங்கப்பட்டது.

மாணவர்கள் கணிகா மற்றும் ரகுகுமார் இந்த சிறப்பு ஹோமத்தில் பங்கேற்று தங்கள் அனுபவங்களையும், தேர்வுக்கான எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்தனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...