பொள்ளாச்சியில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மாணவர்களுக்காக ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் நடைபெற்றது

மாணவ மாணவிகளின் பொதுத்தேர்வு வெற்றிக்காக பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்று, பல்வேறு மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: ஜனவரி 29 அன்று, பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.



இந்த ஹோமம், தமிழ்நாடு மாநில பொதுத் தேர்வில் பங்கேற்கும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வெற்றி பெற ஆசிகளை பெறுவதற்கு நடத்தப்பட்டது.



இந்த நிகழ்வு, மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும், தேர்வு எழுதும் போது அச்சமின்றி இருக்க வேண்டும் மற்றும் கல்வி ஞானத்தில் சிறப்பு பெற வேண்டும் என்பதை முன்னிறுத்தி நடைபெற்றது.



கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த ஹோமத்தில் பங்கேற்றனர்.



ஹோமத்தில் வேத மந்திரங்கள் முழங்க லஷ்மி ஹயக்ரீவருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. மாணவர்கள் லஷ்மி ஹயக்ரீவர் மகா மந்திரத்தை 21 முறை உச்சரித்து, தேர்வுகளில் சிறந்து விளங்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில் பல பெற்றோர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு பென்சில், பேனா ஆகியவை வழங்கப்பட்டது.

மாணவர்கள் கணிகா மற்றும் ரகுகுமார் இந்த சிறப்பு ஹோமத்தில் பங்கேற்று தங்கள் அனுபவங்களையும், தேர்வுக்கான எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்தனர்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...