பொள்ளாச்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 74 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியேற்றம்

சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள், தலைவர்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியடிகள், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், ஜான்சி ராணி லட்சுமி பாய் உட்பட 90 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: நாட்டின் 75 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் 9வது வார்டுக்கு உட்பட்ட சுப்பையா நகர் மைதானத்தில் 75 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு 74 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.

மேலும் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர திமுக செயலாளர் நவநீதி கிருஷ்ணன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விடப்பட்டனர். அதனை தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள், தலைவர்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியடிகள், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், ஜான்சி ராணி லட்சுமி பாய் உள்ளிட்ட 90 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

துடியலூர், வடமதுரையில் சூறாவளிக் காற்று அட்டகாசம்: கடைகளின் மேற்கூரைகள் பறந்தன; மரங்கள் சாய்ந்தன

கோவை புறநகர் பகுதிகளான துடியலூர், வடமதுரை மற்றும் தடாகம் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவள...

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...