மாநில செம்மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்-பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் புகார்

இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசக் கூடியவர்கள் 24ஆயிரத்து 891 பேர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 649 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் 30 கோடி பேர் பேசக்கூடிய தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாணவரணி சார்பில் பொள்ளாச்சி பிளாக் மாரியம்மன் கோவில் ஜீவா திடலில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.



கூட்டத்துக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு மாநில மொழிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் செம்மொழிகளாக கருதப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்கி உள்ளது.

இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசக் கூடியவர்கள் 24ஆயிரத்து 891 பேர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 649 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் 30 கோடி பேர் பேசக்கூடிய தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநிலங்களை முடக்குவதற்கும், மாநில மொழிகளை முடக்கும் செயல் என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என குற்றம் சாட்டினார்.

Newsletter

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...