உடுமலை அமராவதி அணையில் இருந்து இன்று பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக 2229 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், புதிய ஆயக்கட்டுப் பாசனத்திற்கு 64.45 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மொத்தம் 3293.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் மழை பெய்த காரணத்தால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக வந்து அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாகவே முழு கொள்ளவாக உள்ளது.

இந்த நிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று முதல் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக 2229 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், புதிய ஆயக் கட்டுப்பாசனத்திற்கு 64.45 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மொத்தம் 3293.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.

வருகின்ற மார்ச் 15-ம் தேதி முடிய 50 நாட்கள் தகுந்த இடைவெளி விட்டு 28 நாட்களுக்கு தண்ணீர் வழங்கபடும். இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...