சாமளாபுரத்தில் தனியார் பள்ளியில் நிர்வாக பிரச்சனை – கல்வி பாதிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் சாலை மறியல்

சில நாட்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகத்தை மாற்றினால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகும். எனவே பள்ளி நிர்வாகத்தை மாற்ற வேண்டாம் என்று கூறி பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் அருகே தனியார் (லிட்ரசி) பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி அறங்காவலர் குழு செயலாளரான ராமமூர்த்தி என்பவர் பள்ளி நிர்வாகத்தை நடத்தி வருகின்றார். அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்த செந்தில்குமார் மற்றும் சில உறுப்பினர்களை சில மாதங்களுக்கு முன்பு குழுவில் இருந்து நீக்கியுள்ளனர்.

நீக்கப்பட்டவர்கள் இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த செந்தில்குமார் தரப்பினர் நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வந்து விட்டதாகவும், இனிமேல் பள்ளி நிர்வாகத்தை தாங்கள் நடத்த போவதாகவும்,பள்ளியை விட்டு ராமமூர்த்தியை வெளியேறுமாறும் கூறியுள்ளனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மங்கலம் காவல் நிலையத்தில் செந்தில்குமார் தரப்பினர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெறும் பிரச்சினையால் மாணவர்கள் கல்வி பாதிப்பதாக கூறி பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பள்ளி தாளாளர் ராமமூர்த்தி வெளியேற வேண்டாம் என கூறி மாணவர்களும் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் சில நாட்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகத்தை மாற்றினால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகும். எனவே பள்ளி நிர்வாகத்தை மாற்ற வேண்டாம் என்று கூறி பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் டிஎஸ்பி விஜயகுமார், மங்கலம் போலீசார், மாவட்ட கல்வி அலுவலர் பெற் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தேர்வு நெருங்கி வரும் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகம் மாறினால் ஆசிரியர்கள் மாற்றப்படுவார்கள். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை உருவாகும் என பெற்றோர்களும், மாணவர்களும் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...