உடுமலை நகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகள் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறுஞ்சேரி, சின்ன வீரன்பட்டி, கண்ணமநாயக்கனூர், ராகல் பாவி, கணபதிபாளையம் பூலாங்கிணறு போன்ற ஒன்பது ஊராட்சிகளை உடுமலை நகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம்

முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உடுமலை நகராட்சியுடன் கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறுஞ்சேரி, சின்ன வீரன்பட்டி, கண்ணமநாயக்கனூர், ராகல் பாவி, கணபதிபாளையம் பூலாங்கிணறு போன்ற ஒன்பது ஊராட்சிகளை உடுமலை நகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இந்த ஆணையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக அதிகம் உள்ள கிராமங்களில் அனைவரும் 100நாள் வேலையை நம்பி இருக்கும் நிலையில், நகராட்சியுடன் இருப்பதால் வேலை கிடைக்காமல் போய்விடும். எனவே தமிழக அரசு உடனடியாக மக்கள் நலன் கருதி உடுமலை நகராட்சி உடன் ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் சார்ந்த வரிகள் போன்றவை உயர்த்தப்படும் காலியிடங்களுக்கான வரி விதிக்கப்படும், வீட்டு மனைகளின் விலை அதிகமாகும், நகராட்சியுடன் ஊராட்சி நினைத்தால் கிராம மக்களில் வாழ்வாதாரம் பாதிக்கும் ஊராட்சி பகுதிகளுக்கு மெட்டல் சாலை சிமெண்ட் போன்ற பணிகளுக்கு நிதி வராது, விவசாயிகளுக்கு தென்னை மரம் வரப்பு வைத்தல், செக் டேம் கட்டுவது, குளம் குட்டை தூர்வாருவது போன்ற மேற்கொண்ட பணிகளுக்கும் எந்த ஒரு நிதியும் வராது. அனைத்து வரிகளும் கிராம மக்கள் தலையில் வந்து சேரும் என தெரிவித்தனர்.

எனவே அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்யப்படவில்லை

என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, விடுதலை சிறுத்தைகள், இந்து சாம்ராஜ்யம், உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...